உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர் உபகரணங்கள் திருட்டு

Published On 2022-11-22 08:27 GMT   |   Update On 2022-11-22 08:27 GMT
  • சேத்தூரில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உபகரணங்கள் திருடு போயின.
  • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

சென்னையை சேர்ந்தவர் முத்து வெங்கடகிருஷ்ணன் (வயது 52). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது நிறுவனம் சார்பில் 2009-ம் ஆண்டு ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள முகவூர் ரோட்டில் செல்போன் டவர் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அந்த டவர் செயல்பாடின்றி இருந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் செல்போன் டவரில் இருந்த விலையுயர்ந்த பேட்டரிகள், மின் சாதனங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 26 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News