உள்ளூர் செய்திகள்

பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது

Published On 2022-12-13 07:22 GMT   |   Update On 2022-12-13 07:22 GMT
  • விருதுநகர் அருகே பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
  • பழைய பஸ் நிலையம் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார்.

விருதுநகர்

விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் அதிகாலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஆலங்குளம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்ற வாலிபர் படுத்திருந்தார். அதைப்பார்த்த சிவானந்தம் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் அவரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். மேலும் பாலூட்டும் அறையின் கண்ணாடியை உடைத்து சிவானந்தத்தையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ்நிலையத்தில் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News