உள்ளூர் செய்திகள்

ஒரு மாத சம்பளத்தை கல்விக்காக வழங்கிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

Published On 2023-10-09 08:59 GMT   |   Update On 2023-10-09 08:59 GMT
  • ஒரு மாத சம்பளத்தை கல்விக்காக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) வழங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் தனது 82- வது மாத ஊதியத்திலிருந்து (ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்) சேத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த வித்யா, முத்துச்செல்வி, மஞ்சுளா, ராஜபாளை யத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் சொக்க நாதன்புத்தூர் ஊராட்சியைச்சேர்ந்த திவ்யா ஆகிய 6 மாணவிகளுக்கு மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் படிப்பு போன்ற மேற் படிப்பை தொடர ஏதுவாக கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்தார்.

அதன்படி கல்வி உதவித் தொகையை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாணவ, மாணவி களுக்கு வழங்கினர். அப்போது அவர்கள் கல்வியை சிறப்பாக பயின்று எதிர்காலத்தில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவிகள் இரு வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News