உள்ளூர் செய்திகள்
- நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர், அழகிய மீனாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கிருதுமால் நதியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை,புண்யாக வாசனம், கோ, லெட்சுமி பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.