உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-06-02 07:35 GMT   |   Update On 2023-06-02 07:35 GMT
  • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்தக்குறிச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சங்கரலிங்கம் (19). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி சங்கரலிங்கத்தின் சகோதரிக்கு திருமணம் நடந்தது. அப்போது சங்கரலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். ஆனால் ராமச்சந்திரன் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த சங்கரலிங்கம் சகோதரிக்கு சீர்கொடுக்க செல்லாமல் இருந்து விட்டார்.

இந்த நிலையில் அருப்புக்கோட்ைட அருகே உள்ள செங்குளம் பகுதியில் சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News