உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-08-20 08:39 GMT   |   Update On 2022-08-20 08:39 GMT
  • கஞ்சா விற்ற வாலிபர் கைதானார்.
  • ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் அருகில் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை கஞ்சா விற்றது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News