உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

Published On 2023-06-02 07:41 GMT   |   Update On 2023-06-02 07:41 GMT
இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சுழி

விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரது மனைவி கனகா(வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனநல பாதிப்பில் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News