உள்ளூர் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம்
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
- இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.1 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது.