உள்ளூர் செய்திகள்

கணவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-09-28 07:05 GMT   |   Update On 2023-09-28 07:05 GMT
  • கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி தேவசுமதி. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் தேவசுமதிக்கு முடித்தலை பகுதியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதாலாக மாறியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தேவசுமதி 4 வருடங்கள் இளையராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.

அவரை தேடி கண்டு பிடித்த கணவர், குழந்தை கள் வளர்ந்துவிட்டதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்று தேவசுமதியும் மீண்டும் வீட்டுக்கு வந்தார். ஆனால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனை கணவர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் தேவசுமதி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து செல்போனை கணவர் வாங்கினார். அப்போது போனில் பேசியது இளையராஜா என தெரியவந்தது.

தனது மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறி கூறி அவரை கணவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சின் அருகே ஜோசப் சென்று கொண்டிருந்த போது இளையராஜா அவரை வழிமறித்து அரிவா ளால் வெட்டியுள்ளார்.

அதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஜோசப் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News