உள்ளூர் செய்திகள்

சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதி

Published On 2023-03-28 08:51 GMT   |   Update On 2023-03-28 08:51 GMT
  • சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
  • மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள கெருக்கான்பட்டி கிராமம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இந்த பகுதியில் 1995-ம் ஆண்டு முதல் காலை 7. 40 மணியளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு பஸ் இயக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டு காலை 6.15 மணியளவில் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், பணிமனை கிளை மேலாளர் மாரியப்பனிடம் பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருக்கிறது. காலை 6.15 மணிக்கு வரும் பஸ் இந்த பகுதியில் பெயருக்காக இயக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் சரியான நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News