உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலி

Published On 2023-06-22 08:36 GMT   |   Update On 2023-06-22 08:36 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலியானார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாய்பாபா கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி கற்பகவல்லி ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News