உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு

Published On 2023-07-08 06:10 GMT   |   Update On 2023-07-08 06:10 GMT
  • அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
  • திருச்சுழி அருகே பதட்டம்-போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறங்கி முத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் பச்சை இலந்தை முள் மீது நடந்து பக்தர்கள் அருள் வாக்கு கூறுவது சிறப்பு.

கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் சாமி கும்பி டுவது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கோவில் வழிபாடு விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் அடிக்கடி மோதி கொண்டனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து ஒரு தரப்பினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்க ளுக்கு சொந்தமான இடத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் தொடங்கினர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலலை சுற்றி போலீசார் பாது காப்பு பணியில் நிறுத்தப் பட்டனர். நேற்று (7-ந்தேதி) கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடைசி ே நரத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காப்பை காரணம் காட்டி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்த அவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவி லுக்கு சென்று தாங்கள் கட்டியிருந்த விரத கயிறை கழட்டினர். கும்பாபி ஷேகம் நடத்த முடியாத தால் ஒரு தரப்பினர் கவலையுடன் வீட்டிற்கு சென்றனர். கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்த தால் தொப்பா லக்கரை கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி யது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தர வின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News