உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2023-10-18 07:14 GMT   |   Update On 2023-10-18 07:14 GMT
  • நரிக்குடி- திருச்சுழி பகுதிகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
  • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பட்ட மங்கலம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகன் மாயாண்டி (வயது 30). இவர்கள் தற்போது குடும்பத்துடன் மானா மதுரையில் வசித்து வருகிறார். இவர் மாயாண்டி பார்த்திபனூரில் உள்ள ஹோட்டலில் பணி புரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை வீரசோழன் அருகேயுள்ள பாதனக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற கோவில் திரு விழாவிற்கு மாயாண்டி தனது டூவீலரில் சென்றார். அப்போது மானாச்சாலை அருகேயுள்ள சீனிக்கார னேந்தல் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள வளைவில் வந்த போது அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மாயாண்டி மீது மோதியதில் கால் முறிந்து படுகாயமடைந் தார்.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாயாண் டியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மாணிக்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராசு என்பவரது மகன் பாண்டி முருகன் (வயது 24). இவர் காரியாபட்டி அருகேயுள்ள எஸ். தோப்பூர் பகுதியிலுள்ள தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மாணிக்கனேந்தல் கிராமத்திற்கு திரும்பிய நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் தனது டூவீலரில் வந்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது புலிக்குறிச்சி அருகே மூலக்கரைப்பட்டி சந்திப்பு பகுதியில் வந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த பாண்டிமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News