உள்ளூர் செய்திகள்

கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-07-20 08:16 GMT   |   Update On 2023-07-20 08:16 GMT
  • கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் மாநில உணவுப் பாதுகாப்புதுறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையில் கலப்ப–டம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கடந்த மூன்று மாதங்களில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவ–காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிக–ளில் 19 பால் உணவு மாதிரி–கள் எடுக்கப்பட்டது. அதில் 8 பால் உணவு மாதிரிகள் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்ட–றியப்பட்டுள்ளது. தரம் குறைவான பால் விற்பனை–யாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப் பட்டு அபராதம் விதித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பால் விற்பனை யாளர்கள் அனைவரும் உணவு பாது–காப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். தாங்கள் விற் பனை செய்யும் பாலில் தண்ணீர், ஸ்டார்ச், யூரியா மற்றும் அனுமதிக்கப்படாத பவுடர்கள் கலப்படமின்றி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வுகளின் போது உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன் றியோ, தரம் குறைவான பாலினை நுகர்வோருக்கோ அல்லது பிற உணவுப்பொ–ருள் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்க–ளின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உணவு பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால், விருது–நகர் மாவட்ட உணவு பாது–காப்புத்துறை அலுவல–கத்திற்கு 04562 252255 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News