உள்ளூர் செய்திகள்
நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர்
- மகா சிவராத்திரியை முன்னிட்டு நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
- மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி ஆலய வளாகத்தில் ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயரின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய தோற்றத்தை சிவபெ ருமானுக்கே அர்ப்பணித்துக் கொண்டு சிவனாகவே காட்சியளித்த நீலகண்ட ஈஸ்வரனின் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு முழுவதும் சிவலாயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு சிவன் அவதாரத்தில் சிவராத்திரி பூஜைகள் விடியவிடிய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.