உள்ளூர் செய்திகள்

மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

Published On 2023-06-01 08:38 GMT   |   Update On 2023-06-01 08:38 GMT
  • மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு மாயிருளம்பட்டியை சேர்ந்தர் பொன்ராஜ்(வயது41). இவரது மனைவி பால்பாண்டி யம்மாள். கடந்த 29-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் பொன்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது சகோதரர் மதுசூதனன் பால்பாண்டி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பொன்ராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துைற மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News