உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

Published On 2023-08-27 08:30 GMT   |   Update On 2023-08-27 08:30 GMT
  • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
  • இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்தவர் சங்கரி(வயது62). இவரது மகன் ஆனந்த்(26). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதேவேளையில் பாலவநத்தத்தை சேர்ந்த ரஞ்சித்(28), அழகுமணி(25) ஆகியோர் விருதுநகரில் இருந்து பாலவநத்தத்தை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விருதுநகரை அடுத்த தனியார் கல்லூரி அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த சங்கரி, ஆனந்த், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும் உயிருக்கு போராடிய அழகுமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News