உள்ளூர் செய்திகள்

பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2023-06-29 14:25 IST   |   Update On 2023-06-29 14:25:00 IST
  • பணம்-நகைகளை மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் டி.என்.சி. காலனியை சேர்ந்தவர் சுகுணாதேவி(வயது37). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலை யில் கணவரின் நண்பரான பால்பாண்டி என்பவருடன் பழகத் தொடங்கினார். அவர் தான் ஓட்டல், டிராவல்ஸ் நடத்தி வரு வதாக சுகுணா தேவியிடம் கூறியுள்ளார். மேலும் அவரது குழந்தை களிடம் அன்பாக பழகி யுள்ளார்.

இதைப்பார்த்து அதை நம்பிய சுகுணாதேவி அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அவரது கணவரின் இறப்புக்காக கிடைத்த ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை பால்பாண்டி தனது தொழிலுக்காக கேட்டு வாங்கினார்.

மேலும் சுகுணா தேவியின் வீட்டில் உள்ள பொருட்க ளையும் எடுத்துச் செல்ல தொடங்கினார். இதனால் சந்தேகமடைந்த சுகுணாதேவி தனது பணம், நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு பால்பா ண்டி யிடம் கேட்டு வந்தார். ஆனால் பால்பாண்டி பணம், நகைகளை கொடுக் காமல் தட்டிக்களித்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சுகுணாதேவியின் வீட்டுக்கு பால்பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் வந்தனர். அப்போது அவர்கள் சுகுணாதேவியை அவதூறாக பேசி பணம், நகைகளை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகுணாதேவி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News