உள்ளூர் செய்திகள்
ரூ.18 லட்சத்தில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்
- திருச்சுழி அருகே ரூ.18 லட்சத்தில் சமுதாய கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பரளச்சி கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி வரவேற்றார்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபாணி ,திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மினி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், பரளச்சி ஊராட்சி மன்றத்தலைவர் நாகு (எ) கிச்சான், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.