- ராஜபாளையம் அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி பால் வியாபாரி பலியானார்.
- ராஜபாளையம் ரெட்டியபட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கணபதி நாடார் தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 51). பால் வியாபாரி. இவர் தனது ஊரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தென்காசி மெயின் ரோட்டில் தளவாய்புரம் விலக்கு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் தர்மரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்தநிலையில் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் தர்மரின் அண்ணன் விஜயன் வந்தார். அவர் தர்மரை அங்கிருந்து மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தர்மர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், விபத்துக்கு காரணமான 108 ஆம்புலன்சின் டிரைவரான ராஜபாளையம் ரெட்டிய பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.