உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை

Published On 2022-12-25 08:52 GMT   |   Update On 2022-12-25 08:52 GMT
  • எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
  • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராமசாமி ராஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நகர வடக்கு அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ். என். பாபுராஜ் தலைமையில் தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் அழகுராணி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோகசேகரன், மேலப்பாக்கம் கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சோலைமலை, முன்னாள் கவுன்சிலர் குருசாமி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராதா கிருஷ்ணா ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News