உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

Published On 2023-03-04 08:03 GMT   |   Update On 2023-03-04 08:03 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
  • 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மருத்துவா்கள் சீனிவாசன் (மனநலம்),சுரேஷ் (எலும்பு முறிவு), ரமேஷ் பாபு (காது, மூக்கு, தொண்டை), பாஸ்கரன் (கண்) ஆகியோா் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச் சான்று வழங்கினா்.

மேலும் மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு பதிவு செய்தல், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச்சலுகை பெறுதல், மருத்துவரின் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப் பட்டன.

முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து 1 முதல் 18 வயதுக்குள்பட்டோர் 209 பேர் பங்கேற்று பயன்பெற்றனா். இதில் தேசிய அடையாள அட்டை 60 பேருக்கும், ரெயில் மற்றும் பஸ் பயண கட்டணச் சலுகை 180 பேருக்கும், உதவி உபகரணங்கள் 34 பேருக்கும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News