- 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
- காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 16,82,050 (98.50 சதவீதம்) நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 15,81,862 (92.64 சதவீதம்) நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி 2,69,354 நபர்களுக்கும் என மொத்தம் 35 லட்சத்து 33 ஆயிரத்து 266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.