உள்ளூர் செய்திகள்
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
- முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தூத்துக்குடியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் செழியனின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும் இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார். மாணவர் செழியனை லயன்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர். முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.