உள்ளூர் செய்திகள்

பழமைவாய்ந்த சிவாலயம்.

13-ம் நூற்றாண்டில் கட்டபட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-11-16 07:24 GMT   |   Update On 2023-11-16 07:24 GMT
  • 13-ம் நூற்றாண்டில் கட்டபட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
  • அரசுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியமான முடுக்கன்குளம் சிவகாமி அம்மன் சமேத அம்பல வாண சுவாமி கோவில் 13-ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில் முற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோவி லில் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவ தற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனை தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம் என்ற பெருமையை உடைய கோவிலாகும்.

இவ்வாறாக மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வரும் அம்பலவாணர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல வருடமாகி விட்டது.தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள முடுக்கன் குளம் பழமை வாய்ந்த அம்பலவாணர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News