உள்ளூர் செய்திகள்

நூலக புரவலருக்கு பாராட்டு

Published On 2023-05-20 13:42 IST   |   Update On 2023-05-20 13:42:00 IST
  • நூலக புரவலருக்கு பாராட்டு விழா நடந்தது.
  • தன்னார்வலர் முனியசாமி கண்ணன் புரவலராக இணைந்தார்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. நிர்வாகியான புரவலர் ஆசிரியர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார்.

ஆசிரியர்கள் ராமையா,பெருமாள் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தகங்க ளையும் வழங்கி, புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.

மேலும் இந்த விழாவில் நூலக தன்னார்வலர் முனியசாமி கண்ணன் ரூ. 21 ஆயிரம் செலுத்தி 92-வது புரவலராக இணைந்தார். அவருக்கு நூலகத்துறை சார்பிலும், வாசகர் வட்டத்தின் சார்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நூலகர் முத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News