உள்ளூர் செய்திகள்

வனவருக்கு மிரட்டல்; கணவன்- மனைவிக்கு வலைவீச்சு

Published On 2022-07-14 10:43 GMT   |   Update On 2022-07-14 10:50 GMT
  • ராஜபாளையம் வனவருக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
  • ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ராஜபாளையம்

ராஜபாளையம் வனச்சரக வனவர் இளவரசன் (வயது 29). வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து விசாரித்தபோது மாலையாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மலைவாழ் மக்களிடம் மரங்களை வெட்ட சொல்லி விறகுகளை வாங்கி ஓட்டல்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகர்சாமியை வனவர் எச்சரித்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமியின் மனைவி பாலத்துக்கனி என்பவர் செல்போன் மூலம் இளவரசனை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இதுகுறித்து இளவரசன் ராஜபாளையம் வடக்கு‌ போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, அவரது மனைவி பாலத்துகனியை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News