உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து 19½ பவுன் நகை கொள்ளை

Published On 2023-03-07 08:31 GMT   |   Update On 2023-03-07 08:31 GMT
  • விருதுநகர் அருகே வீடு புகுந்து 19½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
  • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கிளி(52),விவசாயி. இவரது மனைவி சுப்புத்தாய் நேற்று இருவரும் வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 19½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

மாலையில் வீடு திரும்பிய ராஜாக்கிளி நகை திருடுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News