உள்ளூர் செய்திகள்

பட்டாசு ஆலை ஊழியர் தற்கொலை

Published On 2023-04-17 12:45 IST   |   Update On 2023-04-17 12:45:00 IST
  • பட்டாசு ஆலை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
  • இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வெற்றிலை ஊரணி மேலத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 43), பட்டாசு ஆலை ஊழியர். இவர் இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தார். காலையில் சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி அவரது மனைவி ஜோதி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News