உள்ளூர் செய்திகள்

டிரைவர்-மாணவி தற்கொலை

Published On 2023-10-18 08:46 GMT   |   Update On 2023-10-18 08:46 GMT
  • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
  • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News