உள்ளூர் செய்திகள்

வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி

Published On 2023-02-25 08:37 GMT   |   Update On 2023-02-25 08:37 GMT
  • துபாயில் வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
  • பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவரது மருமகன் மணிவண்ணன். இவர் ஓசூரில் ஓட்டல் ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில் சுப்புராஜூக்கு மதுரை அழகப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி (60), கங்காதேவி (56), ஸ்ரீராம் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வெளிநாடுகளில் நண்பர்கள் உள்ளதாகவும், மருமகனுக்கு துபாய் ஓட்டலில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசைவார்த்தை கூறி நம்பவைத்துள்ளனர்.

அதன்பின்னர் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.30 லட்சம் தேவைப்படும் என்றும், உடனடியாக வேலை வாங்கிவிடலாம் என்றும் கூறியுள்ளனர். சுப்புராஜூம் அவர்களிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இது குறித்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவுப் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்புடைய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News