உள்ளூர் செய்திகள்

காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறப்பு

Published On 2023-08-03 12:39 IST   |   Update On 2023-08-03 12:39:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
  • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கம்மாள் (வயது 18). இவர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபரை தீவிரமாக காதலித்து வந் தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்தனர். இதனை அறிந்த ஜக்கம்மாள் கடந்த 23.5.2023 அன்று காதலன் பிரவீன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே–றினார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு–பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதி–மன்றத்திலும் வழக்கு நிலு–வையில் இருந்தது. இதற்கி–டையே மாயமான ஜக்கம் மாள் 7 மாத கர்ப்பிணியா–னார். மேலும் கோர்ட்டில் நடந்த வழக்கில் காதலன் பிரவீன்குமார் விடுதலையா–னார்.கர்ப்பிணியாக இருந்த ஜக்கம்மாள் தனது பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி ஜக்கம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு நாளில் அந்த குழந்தைக்கு மூச்சு, பேச்சு இல்லாமல் போனது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதுதொடர்பாக ஜக்கம் மாள் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News