உள்ளூர் செய்திகள்

வியாபாரி மாயம்

Published On 2023-05-14 07:49 GMT   |   Update On 2023-05-14 07:49 GMT
  • வியாபாரி மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News