உள்ளூர் செய்திகள்

முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்

Published On 2023-09-14 08:40 GMT   |   Update On 2023-09-14 08:40 GMT
  • முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின் படியும் விருதுநகர், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலா ளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர்.

விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட திருமங்கலம் பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோ கப்படுத்தி வந்த மின்னணு மற்றும் விட்டத்தராசுகன் உள்ளிட்ட 97 எடையளவை கள் பறிமுதல் செய்யப்பட் டன. மேலும் தெரு வோர வியாபாரிகள் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்கள், சந்தை கள் மற்றும் கடைகள் நிறு வனங்களில் உபயோகப் படுத்தப்படும் எடையளவு களை மறுபரிசீலனை செய்து முத்திரையிடுமாறும், அதற்குரிய மறுபரிசீலனைச் சான்றினை ஆய்வின்போது காண்பிக்கும் வகையில் வைத்திருக்குமாறும் அறி வுறுத்தினர்.

மேலும் வணிகர்கள் தராசு உள்ளிட்ட எடைய ளவை களை அரசால் அங்கீ கரிக்கப்பட்ட விற்பனை யாளர்களிடம் வாங்கும் போது, எடையளவைகள் முத்திரை யிடப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்க்குமாறும், அதற்கான மறுபரிசீலனை சான்றினை கேட்டுப் பெறு மாறும் அறிவுறுத்தினர்.

எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்க ளுக்கு 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத் தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணை யர், துணை ஆய்வாளர், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச் செல்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News