உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-13 08:20 GMT   |   Update On 2023-06-13 08:20 GMT
  • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேர்ல்டு விஷன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வக்கீல்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News