உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் சதுரங்க போட்டி

Published On 2022-07-21 08:25 GMT   |   Update On 2022-07-21 08:25 GMT
  • அரசு பள்ளியில் சதுரங்க போட்டியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 44-வது சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு ராஜபாளையம் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில், தமிழ்நாட்டில் நடக்க இருப்பது முதல்வரின் விடா முயற்சியே காரணம். சதுரங்கபோட்டியானது மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள தங்களை தாங்களே சோதித்துக் கொள்ள இந்த போட்டியை தேர்ந்தெடுத்து விளையாடினர். அதுபோல் மாணவசெல்வங்களாகிய நீங்கள் உங்களது அறிவை தீட்டுவதற்கும், கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் இந்த போட்டி உதவியாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News