உள்ளூர் செய்திகள்

யோகா தினம் கொண்டாட்டம்

Published On 2023-06-23 08:14 GMT   |   Update On 2023-06-23 08:14 GMT
  • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
  • கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

Tags:    

Similar News