உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-06-08 11:16 GMT   |   Update On 2022-06-08 11:16 GMT
  • ராஜபாளையம் அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே நத்தனேரி சாவடி தெருவை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி ரத்தினமணி (வயது46). ரகு 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ரத்தினமணியிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். நேற்று காலை ரத்தினமணி வீட்டிற்கு சென்று அவரது கையை பிடித்து இழுத்துள்ளார்.

அவர் சத்தம் போட்டதால் முத்துக்குமார் தப்பி சென்று விட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் வந்து முத்துகுமார் ரத்தினமணியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போதும் ரத்தினமணி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து உள்ளனர்.

இதனை கண்ட முத்துக்குமார் தப்பி சென்று விட்டார். இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விதவை பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முத்துகுமாரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News