உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபயண பேரணி

Published On 2022-08-09 14:35 IST   |   Update On 2022-08-09 14:35:00 IST
  • காளீஸ்வரி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது.
  • இந்த பேரணி ‘‘தூய்மை இந்தியா இயக்கத்தின்’’ ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ேநாக்கத்தில் நடத்தப்பட்டது.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையில் விரிவாக்க பணி சார்பில் ''எனது குப்பை எனது பொறுப்பு, எனது நகரின் தூய்மை, எனது கடமை '' என்ற தலைப்பை மையமாக கொண்டு விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது.

இந்த பேரணி ''தூய்மை இந்தியா இயக்கத்தின்'' ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ேநாக்கத்தில் நடத்தப்பட்டது. இதில் இளங்கலை வணிகவியல் துறையை சேர்ந்த 170 மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அ.மீனாட்சிபுரம் வழியாக ஆனைக்கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பேரணி நடந்தது.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளினால் வரும் பிரச்சினைகள், தூய்மை நகரம் பற்றிய விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக சென்று கிராம மக்களுக்கு வழங்க–ப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைஇளங்கலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

Tags:    

Similar News