உள்ளூர் செய்திகள்

பருத்தியில் அதிக மகசூலை கொடுக்கும் பூஸ்டர் பற்றிய விழிப்புணர்வு

Published On 2022-10-09 08:02 GMT   |   Update On 2022-10-09 08:02 GMT
  • அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பருத்தியில் அதிக மகசூலை கொடுக்கும் பூஸ்டர் பற்றிய விழிப்புணர்வு நடந்தது.
  • பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.

பாலையம்பட்டி

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி உலக பருத்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பருத்தியில் அதிக மகசூல் பெற பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

வேளாண்மை பல்கலைக்கழத்தின் பயிர் வினையியல் துறை மூலம் பருத்தி பிளஸ் என்னும் பயிர் ஊக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2.5 கிலோ தெளிக்க வேண்டும்.

இது பூ உதிர்வை கட்டுப்படுத்தும். காய் பிடிப்பு திறனை அதிகரிக்கும். இதனை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரம் கிராமத்தில் பருத்தி பிளஸ் தெளிப்பு பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பயிர் வினையியல் துறை உதவி பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உரையாற்றினார். அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News