உள்ளூர் செய்திகள்

கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் போலீசார் மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

Published On 2022-09-23 07:16 GMT   |   Update On 2022-09-23 07:16 GMT
  • அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்தனர்.
  • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் வடக்கு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் செண்பக ரத்தினம் (வயது 68). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில்நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செண்பகரத்தினம் வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே இறங்கி உள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த செண்பகரத்தினம் கழுத்தை நெரித்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தில் வசிப்ப

வர்கள் அங்கு வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து அருப்பு க்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர்.

அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே அருப்புக்கோ ட்டை போலீசார் தினமும் இரவு ரோந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News