உள்ளூர் செய்திகள்

வங்கி மேலாளர் மீது தாக்குதல்

Published On 2023-06-24 07:56 GMT   |   Update On 2023-06-24 07:56 GMT
  • வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர்

சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 63). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதில் காயமடைந்த பெருமாள்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News