உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் நகர-வட்டார தலைவர்கள் நியமனம்

Published On 2022-11-21 06:37 GMT   |   Update On 2022-11-21 06:37 GMT
  • விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நகர-வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ராஜபாளையம்

விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 3 நகர தலைவர்கள், 10 வட்டார தலைவர்கள் பதிவிகள் உள்ளது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த புதிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையினால் அங்கீகரி க்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நகர, வட்டார காங்கிரஸ் தலைவர்களை மாவட்ட தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதில் ராஜபாளையம் நகரத் தலைவராக சங்கர் கணேஷ், சாத்தூர் நகர தலைவராக அய்யப்பன், ஸ்ரீவில்லி புத்தூர் நகர தலைவராக வன்னியராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ராஜ பாளையம் மேற்கு வட்டார தலைவராக கணேசன், ராஜபாளையம் கிழக்கு வட்டார தலைவராக கோபால கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவராக கணேசன் வெம்பக்கோட்டை வடக்கு தலைவராக செல்வக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவராக பவுல்ராஜ், சாத்தூர் மேற்கு வட்டார தலைவராக கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு வட்டார தலைவராக பாலகுருநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வட்டார தலைவராக முருகராஜ், வத்ராயிருப்பு மேற்கு வட்டார தலைவராக லட்சுமணன், வத்ராயிருப்பு கிழக்கு வட்டார தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் அறிவிக்கபட்டுள்ளனர்.

இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News