உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2023-09-10 08:04 GMT   |   Update On 2023-09-10 08:04 GMT
  • நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிக்கப்பட்டது.
  • சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் கடம்பங்குளம் பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி(54). இன்று காலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி உள்ளனர். மேலும் நாகலட்சுமி சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News