காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
- காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த பரிதாப சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சந்தன கருப்பசாமி (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
சந்தனகருப்பசாமி தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்தன கருப்பசாமி மன வருத்தத்துடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சந்தன கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.