உள்ளூர் செய்திகள்

கடனை திருப்பி கேட்ட கணவன்-மனைவிக்கு அடி-உதை

Published On 2023-08-16 08:56 GMT   |   Update On 2023-08-16 08:56 GMT
  • கடனை திருப்பி கேட்ட கணவன்-மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
  • எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார்.

விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரநல்லூரை சேர்ந்தவர் கவிதா(40). இவர் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் தினகரன். திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன். இவரது தொழில் தேவைக்காக கவிதா ரூ.97 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் பூர்ணசந்திரன் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் கவிதா கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கவிதாவும், கணவரும் பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூர்ணசந்திரன் மனைவி கீதா, தம்பி கோபால் மற்றும் சிலர் சேர்ந்து கவிதா, தினகரனை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார். மேலும் கணவன்-மனைவி சிலருடன் சேர்ந்து தன்னையும் குடும்பத்தாரையும் தாக்கியதாக கீதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News