- வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். ஆத்தியப்பன் வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்ப டுகிறது.
இந்த நிலையில் கட்ட னார் பட்டியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கில் கைகள் கட்டப்பட்டு, வெட்டு காயங்களுடன் ஆத்தி யப்பன் பிணமாக கிடந்தார்.
தகவலறிந்த வச்சக்கா ரப்பட்டி போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா மேற்பார்வையில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆத்தியப்பனை முன் விரோதத்தில் ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (19), மாரீஸ்வரன் (24), மைன் பீட்டர் (28) வசந்தகுமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்ததுது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.