உள்ளூர் செய்திகள்
- பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் அங்காளபரமேசுவரி (வயது 26) இவரும் ,அவரது மகளும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மண்வெட்டி காலில் வெட்டியதில் அங்காள பரமேசுவரிக்கு காயம் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று நின்றிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அங்காள பரமேசுவரி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர்.
இதுபற்றி நரிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.