உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-08-11 13:18 IST   |   Update On 2023-08-11 13:18:00 IST
  • பிளஸ்-2 மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
  • சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள சேஷபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வளர்மதி(34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வளர்மதிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வளர்மதி மகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகாசி பராசக்தி காலனி யை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று சலூன் கடைக்கு சென்று மாணவர் முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை முடியை சரியாக வெட்ட வில்லை என கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் தொப்பி அணிந்துவர தடை விதித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News