- விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ஹவுசிங் போர்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (62). இவர் தொடர் மூட்டு வலி காரணமாக அவதி அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் (43). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நலபாதிப்பும் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்கொலை செய்து கொண்டார்.